வீட்டை விட்டு 'வெளியேறிய' ஆஜீத்... மிஸ் யூ சொன்ன பிக்பாஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஷிவானி, ரம்யா, ஆஜீத், சோம் மற்றும் கேப்ரியலா ஆகிய ஐந்து பேர் இடம்பெற்று இருந்தனர். இதில் நேற்று முதல் நபராக கேப்ரியலா காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். தொடர்ந்து இன்று சோம் காப்பாற்றப்பட்டதை நீங்கள் ஒரு தீர்க்கதரிசி, அதனால் தான் தனியாக அமர்ந்து இருக்கிறீர்கள் என புகழ்ந்து ஜாலியாக சொன்னார்.

Who is Evicted this Week from Bigg Boss Tamil?, Read Here!

ரம்யா, ஷிவானி, ஆஜீத் ஆகிய மூவரும் எஞ்சியிருந்தனர். இதில் ஷிவானியும் காப்பாற்றப்பட்டதாக கமல் தெரிவிக்க ரம்யா, ஆஜீத் இருவரும் திக் திக் மனநிலையில் இருந்தனர். இருவரையும் ஸ்டோர் ரூம் சென்று பெட்டிகளை எடுத்து வர சொன்ன கமல் ஆஜீத் வெளியேறியதாக அறிவித்தார். ஆஜீத்தின் பெட்டியில் சிவப்பு இருந்த போதே அவர் தான் என்பது தெரிந்து விட்டது.

வீட்டை விட்டு வெளியேறிய ஆஜீத் பாட்டு ஒன்றை பாட, பாட்டு நன்றாக இருந்ததாக பாராட்டிய பிக்பாஸ் அவரை மிஸ் செய்வதாக சொல்லி ஆல் தி பெஸ்ட் என வழியனுப்பி வைத்தார். பிக்பாஸ் வீட்டில் இருந்து மூன்றாவது வாரமே வெளியேறி இருக்க வேண்டிய ஆஜீத் அப்போது தன்னிடம் இருந்த எவிக்க்ஷன் பிரீ பாஸை வைத்து தன்னை காப்பாற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Who is Evicted this Week from Bigg Boss Tamil?, Read Here!

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.