www.garudabazaar.com

அமானுஷ்யம்.. திகில் என விறுவிறுப்பான சீரியல் முடிஞ்சிருச்சா?!... நடிகரின் உருக்கமான Post!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் முன்னணி சேனலான ஜீ தமிழ் டிவியில், ஒளிபரப்பாகி வரும் சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்களை பெரும்பாலும் கவரும் வகையில் வெற்றிநடை போட்டு வருகின்றன.

tamil tv serial ends actor emotional pic and post

அந்த வகையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த வகையில் பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த சீரியல்தான் யாரடி நீ மோகினி. இந்த சீரியல் விரைவில் முடிய போவதாக அண்மையில் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவை பதிவிட்ட சீரியல் நடிகர் குழுவினர் “கடைசி நாட்கள் படப்பிடிப்பு” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில்தான் இந்த சீரியல் தற்போது ஆகஸ்ட் 23-ஆம் தேதியான நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை அடுத்து இந்த சீரியலின் ரசிகர்கள் சீரியல் முடிந்துவிட்டதே என்கிற சோகத்தில் உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 24 இல் யாரடி நீ மோகினி சீரியலின் ஒளிபரப்பு தொடங்கியது.

தற்போது வரை சுமார் 4 வருடங்களுக்கு மேல் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியலில் குடும்பம், பாசம், அமானுஷ்யம், திகில் கலந்த டிராமா கதை பாணியில் காட்சிகள் படமாக்கப்பட்டன.

எப்போதும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இந்த சீரியலின் திரைக்கதை நகர்த்தப்பட்டு வந்த நிலையில் இந்த சீரியலில் கௌதம் என்கிற கேரக்டரில் நடித்த சுர்ஜித் தற்போது தம்முடைய சோசியல் மீடியாவில் இந்த சீரியலின் நடிகர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, “நாடகம் முடியலாம்.. நட்பு முடியாது!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த சீரியலில் நடிகர் ஸ்ரீ  முத்து என்கிற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதேபோல் சாயித்ரா ரெட்டி வில்லி கேரக்டரில் நடித்திருந்தார். நட்சத்திரா இந்த சீரியலில் நாயகியாக நடித்திருந்தார், முக்கிய கேரக்டரில் நடிகை ஃபாத்திமா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “CM ஆயிருப்பாரு!.. நாங்க சேர்ந்து travel பண்ணிருந்தா”... விஜயகாந்த் பிறந்த நாளில் பிரபல நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

tamil tv serial ends actor emotional pic and post

People looking for online information on Natchathira, Trending, YaaradiNeeMohini, ZeeTamil will find this news story useful.