Jango Others
www.garudabazaar.com

"தப்பு நம்மளோடது.. சூர்யா Sorry கேக்குறாரேனு அழுதுட்டார்!".. 'சூரரைப்போற்று' நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா நடிப்பில் சுதா கொங்கோரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. 

Suriya asked sorry in Soorarai Pottru shoot heartfelt viral post

பெரிய அளவில் ஹிட் அடித்த இந்த படத்துக்கு பல சிறப்பு அங்கீகாரங்கள் கிடைத்தன. மலிவுவிலை கட்டணத்தில் பொதுமக்களுக்கான விமானத்தை உருவாக்க கனவு காணும் ஒருவரின் கதையான இப்படம், உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட பயோகிராஃபிக்கல் ஃபிக்‌ஷன் வகையறா படமாக அனைவரிடத்திலும் எழுச்சி படமாக அமைந்தது. 

இப்படத்தின் இயக்குநர் டீமில் பணிபுரிந்த சந்திரா தங்கராஜ், தற்போது சூரரைப் போற்று பட உருவாக்கத்தின்போது நடந்த நெகிழ்ச்சி நிகழ்வினை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், “நான் சந்தித்த மிக தன்மையான மனிதர்களில் நடிகர் சூர்யாவும் ஒருவர். ஒரு பகட்டு இருக்காது கர்வம் இருக்காது மிகப்பெரிய மாண்பாளர் அவர்.

"சூரரைப்போற்று" படப்பிடிப்பில் ஒரு நாள் மேக்கப்மேன் ஒருவர் ஒரு சின்ன குழந்தைக்கு பணி நிமித்தமாக ஒரு தவறைச் செய்துவிட்டார். கொஞ்சம் விட்டிருந்தால் அது ஆபத்தில் முடிந்திருக்கும்.பதட்டத்தில் சூர்யா சார் மேக்கப் மேனிடம்  "ஏங்க பார்த்து செய்யமாட்டிங்களா" என்று கொஞ்சம் உரத்த குரலில் சொல்லிவிட்டார். அந்த மேக்கப்மேன் "ஐய்யோ ஹீரோ கோபமாகிவிட்டார் அவ்வளவுதான் வேலை போகப்போகிறது" என்று பயப்பட ஆரம்பித்து, எல்லோரிடமும் புலம்பிக் கொண்டிருந்தார்.

ஆனால் அடுத்தநாள் சூர்யா சார் அவரை அழைத்து "சாரிங்க நேத்து கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். குழ்தைகள்கிட்ட வேலை செய்யுறப்ப கொஞ்சம் கவனமாக இருங்க" என்று சொன்னதும் அந்த மேக்கப்மேனுக்கு  அழுகையே வந்துவிட்டது.  தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு. தாயரிப்பாளரும் ஹீரோவுமான  அவர் தன்னை வேலையைவிட்டு அனுப்புவார் என்று பார்த்தால் தன்னிடம் சாரி கேட்கிறாரே என்று உருகிப் போய்விட்டார்.

இதுதான் நடிகர் சூர்யா. எளிய மக்களிடம் அன்பு பாராட்டுபவர். துளியும் நிஜ வாழ்வில் பாவனை செய்யாதவர். தன் படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளத்தை மீறியும் பண உதவி செய்பவர். எந்த பாசாங்கும் இல்லாமல் ஒடுக்கப்பட்ட மக்களோடு  கைகோர்த்து நிற்பவரைப் பார்த்து  சாதி அரசியல் நடத்துபவர்களுக்கு பயம் இருக்கத்தான் செய்யும். இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான சினிமாவை எடுங்கள் சூர்யா சார்.. மக்கள்‌ உங்கள் பக்கம் நிற்கிறார்கள். #westandwithsuriya” என்று குறிப்பிட்டுள்ளார். 

தற்போது சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகியுள்ளது. கலவையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றுவரும் ஜெய்பீம் படம் சமூக நோக்கிலான படமாக தாக்கத்தை ஏற்படுத்தி கவனம் பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா, இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்திலான வாடிவாசல் திரைப்படத்திலும், பாண்டிராஜின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடிக்கிறார். 

தொடர்புடைய இணைப்புகள்

Suriya asked sorry in Soorarai Pottru shoot heartfelt viral post

People looking for online information on Soorarai Pottru, Suriya, Trending will find this news story useful.