www.garudabazaar.com

Video: ஆரி 'ஒதுங்கிட்டாரு' அதனால... சனமுடன் சேர்ந்து 'ஸ்கெட்ச்' போட்ட அனிதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் வலிமையான போட்டியாளர்களாக ஆரி, அனிதா, சனம், பாலாஜி, ரம்யா திகழ்கின்றனர். இவர்கள் ஐந்து பேரும் இறுதிவரை செல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் ஆரி, அனிதா, சனம் தனித்தனியாக இருந்தாலும் கூட பிரச்சினை என்று வந்தால் ஒன்று சேர்ந்து கொள்கின்றனர். இதனால் இவர்களை சக போட்டியாளர்கள் விதவிதமான பேர்களை வைத்து கிண்டலடித்து வருகின்றனர்.

Sanam and Anita discussed about contestants Strategy

இந்த நிலையில் அனிதா, சனம் இருவரும் வீட்டின் சூழ்நிலை குறித்து நடத்திய விவாத வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் நாம் மூவரும் குரூப்பாக இருக்கிறோம் என்று சொன்னதால் ஆரி ஒதுங்கி விட்டார். நம்மை பார்த்து அவர்கள் பயப்படுகின்றனர். அதனால் தான் நம்மை கிண்டலடித்து வருகின்றனர் என்பது போல பல்வேறு உண்மைகளை இருவரும் வெளிப்படுத்தி இருக்கின்றனர். 

நாம சண்டை போட்டுக்கிட்டா அவர்கள் அதைப்பார்த்து என்ஜாய் செய்கின்றனர். அதனால் தான் நம்மை பிரிக்க நினைக்கின்றனர் என்று அனிதா சொல்கிறார். குறிப்பாக ரியோ, ஆஜீத்திடம் கேட்ட கேள்விகள் பாலாஜிக்கு கேட்க வேண்டியவை என்று சனம், அனிதா இருவரும் நினைக்கின்றனர். இதேபோல ரம்யாவும் கருதி ரியோவை கேள்விகள் கேட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் சனம், ரம்யா, அனிதா, ஆரி, பாலாஜி ஆகிய ஐவரும் கூட்டணி அமைத்திட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Sanam and Anita discussed about contestants Strategy

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.