www.garudabazaar.com

எப்படி யோசிச்சாங்க? இவர்களுக்கு மரியாதை கொடுத்த 3 சமீபத்திய படங்கள்… சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான மூன்று முன்னணி நடிகர்களின் படங்களில் மூத்த கலைஞர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Raguvaran sivakumar jaishankar references used in recent movies

அழகா இருக்குறது ரொம்ப simple… நடிகை திவ்யபாரதியின் கவனம் ஈர்த்த புகைப்படமும் கேப்ஷனும்!

ராதே ஷ்யாம் படத்தில் ரகுவரன்

மார்ச் 11 ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கும் ராதே ஷ்யாம் படத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்துள்ளது. படத்தில் கதாநாயகன் பிரபாஸின் தந்தையாக மறைந்த மூத்த நடிகர் ரகுவரனின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதுபோல மறைந்த நடிகர்களை தங்கள் படங்களில் பயன்படுத்துவது அவர்களுக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப்படுகிறது.  தமிழ் சினிமாவின் அடையாளங்களுள் ஒருவரான நடிகர் ரகுவரன் வில்லன், குணச்சித்திரம் என எல்லா வேடங்களிலும் நடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்தவர். அவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Raguvaran sivakumar jaishankar references used in recent movies

 

வலிமை படத்தில் ஜெய்சங்கர்

அஜித், ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியாகி பரவலாக வரவேற்பைப் பெற்ற திரைப்படம் வலிமை. இந்த படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளும் ஆக்‌ஷன் காட்சிகளும் உலகத் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டினர். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு திரையரங்கில் வெளியான அஜித் படம் என்பதால் ஏகோபித்த வரவேற்புக் கிடைத்தது. இந்த படத்தில் அஜித்தின் மறைந்த தந்தையாக ஜெய்சங்கர் அவர்களைக் காட்டி இருந்தார்கள். இது ரசிகர்களைக் கவர்ந்த அம்சமாக அமைந்தது.

தமிழ் திரைப்படங்களில் அதிகளவில் கௌபாய் படங்கள் மற்றும் துப்பறியும் வேடங்களில் நடித்தவர் ஜெய்சங்கர் என்று சொல்லலாம். அவரை தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் எனவும் ரசிகர்கள் அழைத்து வந்தனர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெய் சங்கர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி இயற்கை எய்தினார். இந்நிலையில் வலிமை படத்தில் அவரை படக்குழுவினர் கௌரவிக்கும் விதமாக அவருடையப் புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

Raguvaran sivakumar jaishankar references used in recent movies

எதற்கும் துணிந்தவனில் சிவக்குமார்

தமிழ் சினிமாவின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான சிவக்குமார். அவரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் முன்னணிக் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். சமீபகாலமாக சிவக்குமார் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 10 ஆம் தேதி வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் முருகன் வேடத்தில் சிவகுமார் கந்தன் கருணை படத்தில் நடித்த முருகன் வேடப் படத்தை பயன்படுத்தியுள்ளனர்.

Raguvaran sivakumar jaishankar references used in recent movies

இப்படி, ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் புராணப் படங்கள் அதிகமாக உருவானபோது, நிறைய பக்தி படங்களில் நடித்தவர் சிவக்குமார். அதில் கந்தன் கருணை படத்தில் அவர் நடித்த முருகன் வேடம் மக்கள் மனங்களில் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக எதற்கும் துணிந்தவன் படக்குழு பயன்படுத்தியுள்ளது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. குறிப்பாக இப்படத்தில் சூர்யாவும் தந்தையை போலவே முருகன் வேடம் தரித்து ஒரு பாடலில் தோன்றுவார். இதேபோல் எதற்கும் துணிந்தவன் என்பது சிவகுமார் நடித்த பழைய திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“பார்க்க நினைத்தும் முடியாதவர்களுக்காக”… மாநாடு தயாரிப்பாளரின் படம் ஓடிடியில் ரிலீஸ்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Raguvaran sivakumar jaishankar references used in recent movies

People looking for online information on Etharkum Thuninthavan, Jaishankar, Radhe Shyam, Raguvaran, Sivakumar, Valimai will find this news story useful.