''பொறக்கும் போதே எல்லோரும் அம்மணத்தோட தான பிறக்கனும் ?'' - பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' டீஸர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் இயக்கியிருக்கும் படம் 'ஒத்த செருப்பு சைஸ் 7'.  இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Parthiepan and Santhosh Narayanan's Otha Seruppu Teaser released

இந்த படத்தின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் Behindwoods TV யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த படத்தின் டீஸரை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அந்த பதிவில் விக்னேஷ் சிவன் தெரிவித்திருப்பதாவது, இதுவரை யாருமே கேட்டிராத கதைகளை திரையில் சொல்லுவதும், புதிய முயற்சிகளை மேற்கொள்வதும் அவ்வளவு எளிதானது அல்ல. அதனை பார்த்திபன் வெகு இலகுவாக செய்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

டீஸரில் சில நிமிட காட்சிகளையும் அதன் பின்னணி இசையையும் வைத்து பார்க்கும் போது இது திரில்லர் படம் என்ற நினைப்பை வரவழைக்கிறது. டீஸரின் இறுதியில், 'பொறக்கும் போதே எல்லாரும் அம்மனத்தோட தான பொறக்கணும்?, சிலர் மட்டும் ஏன் கோவனத்தோட பிறக்கனும்?, சிலர் ஏன் கோடீஸ்வரனா பிறக்கனும்? என பார்த்திபன் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது.

''பொறக்கும் போதே எல்லோரும் அம்மணத்தோட தான பிறக்கனும் ?'' - பார்த்திபனின் 'ஒத்த செருப்பு' டீஸர் வீடியோ