Reliable Software
www.garudabazaar.com

“உன் முகத்தை கூட காட்டலனு உன் மகள் அழறாண்ணா”.. மாறன் மறைவு குறித்து பா.ரஞ்சித் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திரைத்துறையில் தொடர்ச்சியாக நடிகர்களின் மரணம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியது.

Pa Ranjith emotional tweet actor chengalpat Maran death

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், நகைச்சுவை நடிகர்கள் என கொத்து கொத்தாக பலரது உயிர்களை இந்த காலக் கடத்தில் திரைத்துறை இழந்துள்ளது. இதனை பேரிழப்பு , பெரும் சோகம் என திரைத்துறையினர் மட்டுமல்லாது பொதுமக்களும் வரையறுத்துள்ளனர்.

இந்நிலையில் டிஷ்யூம், கில்லி, தலைநகரம், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகரான 'செங்கல்பட்டு' மாறன் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த நேரம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணத்துக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Pa Ranjith emotional tweet actor chengalpat Maran death

இந்நிலையில் இதுபற்றி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள இயக்குநர் பா.ரஞ்சித், “கடக்க முடியாத துயரம்..எப்போதும் கட்டுகடங்காத அன்பை பொழியும் மாறன் அண்ணாவே, உன் முகத்தை கூட காட்டவில்லை என்று உன் மகள் அழுகிறாள் ணா!! என்னிடம் தேற்றுவதற்கு  வார்த்தைகள் இல்லை!! நண்பர்களே பாதுகாப்பாக இருங்கள் !!” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அத்துடன் தமது படத்தில் மாஞ்சா கண்ணன் என்கிற கதாபாத்திரத்தில் மாறன் நடித்த கேரக்டர் ஸ்டில்லை பா.ரஞ்சித் பதிவிட்டுள்ளார்.

ALSO READ: அதிர்ச்சியில் திரையுலகம்!! கில்லி, தலைநகரம் படங்களின் நடிகர் மாறன் மருத்துவமனையில் மரணம்!!

Pa Ranjith emotional tweet actor chengalpat Maran death

People looking for online information on Pa Ranjith, RIPMaran will find this news story useful.