Video: ஸ்டார்ட் பண்ணவுடனே 'அப்படி' செஞ்சுட்டாரு.... 'குறும்படம்' போட்ட ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டிக்கெட் டூ பினாலேவின் கடைசி டாஸ்க் நேற்று நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் வட்டமாக நின்று மையத்தில் கட்டப்பட்டு இருக்கும் கயிற்றினை இரண்டு கைகளாலும் பிடித்து நிற்க வேண்டும் என்பது விதி. ஆனால் போட்டி தொடங்கிய உடனே பாலாஜி ஒரு கையை விட்டு விட்டார். இதேபோல ரியோ, கேபி ஆகியோரும் செய்தனர்.

Netizens shared Kurumpadam for Balaji in Ticket to Finale Task

இதைப்பார்த்த ஆரி பாலாஜியின் தவறை சுட்டிக்காட்ட இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில் பாலாஜி போட்டியை விட்டு வெளியேறி விட்டார். சிறிது நேரத்தில் ஆரியும் தான் விதிமுறையை மீறி விட்டதாக ஒப்புக்கொண்டு போட்டியை விட்டு விலகினார். இதையடுத்து இருவருக்கும் இடையில் மீண்டும் ஒரு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஒருவரை ஒருவர் வழக்கம்போல கட்டியணைத்து சமாதானம் ஆகினர்.

இந்த நிலையில் ரசிகர்கள் போட்டி தொடங்கிய சில நொடிகளிலேயே பாலாஜி கையை விட்டு விட்டதாக கூறி அவருக்கு ஒரு குறும்படம் போட்டு காட்டியுள்ளனர். இதற்கிடையில் ரம்யா, ஷிவானி இருவரும் இந்த டாஸ்க்கில் விடாப்பிடியாக போட்டியிட்டு வருவதால் யார் வெல்லப்போகிறார்கள்? என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens shared Kurumpadam for Balaji in Ticket to Finale Task

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.