www.garudabazaar.com

சார்! அப்படியே 'ரம்யா'வுக்கும்... ஒரு 'குறும்படம்' போட்டு இருக்கலாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக நேற்று குறும்படம் ஒளிபரப்பானது. ஆரி-சம்யுக்தா இடையிலான பிரச்சினை குறித்து பேசிய கமல் அவர் உங்கள் தாய்மை குறித்து பேசவில்லை என்று சொல்லி சிறிய குறும்படம் ஒன்றை போட்டுக் காட்டினார். இதையடுத்து அர்ச்சனா, ஆரியிடம் சமாதானமாக பேச சம்யுக்தாவும், ஆரியிடம் பேசினார். தொடர்ந்து வளர்ப்பு குறித்து எத்தனை முறை பேசினீர்கள்? என கமல் கேட்க பதிலுக்கு சம்யுக்தா நிறைய முறை பேசி இருக்கிறேன் என்றார்.

Netizens request Kurumpadam for Ramya Pandian also

இதையடுத்து பெற்றோர்கள் குறித்து பேசுவது தவறு அது எந்த இடமாக இருந்தாலும் சரி என்று கமல் கோபப்பட்டார். கடைசியில் வாக்குகள் எண்ணிக்கையில் சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேறினார்.  முதல்முறை வளர்ப்பு சரியில்லை என ஆரியை ஒருமையில் சம்யுக்தா பேசினார். அப்போது ரம்யாவிடம் தான் அவர் பேசினார். ஆனால் அந்த விஷயம் இதுவரை வெளிவரவில்லை. ஆரியை, சம்யுக்தா ஒருமையில் திட்டியது ரம்யாவுக்கு தெரியும்.

ஆனாலும் தொடர்ந்து அவர் சம்யுக்தா பக்கம் தான் சப்போர்ட் செய்தார். நேற்று குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டதை அடுத்து, சம்யுக்தாவுக்கு அந்த விஷயத்தில் சப்போர்ட் செய்த அர்ச்சனா, ஆரியிடம் சாரி கேட்டு விட்டார். ஆனால் வளைத்து,வளைத்து கேள்வி கேட்ட ரம்யா, ஆரியிடம் அதுகுறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் அப்படியே அந்த ரம்யாவுக்கும் ஒரு குறும்படம் போடுங்க சார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens request Kurumpadam for Ramya Pandian also

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.