பணமோசடி வழக்கில் பாலிவுட் நடிகர் கைது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் Murder 2 திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் பிரஷாந்த் நாராயணன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Murder 2 Actor Prashant Narayanan arrested In Cheating Case

கேரள தயாரிப்பாளரிடம் பண மோசடியில் ஈடுபட்டு ஏமாற்றிய காரணத்திற்காக நடிகர் பிரஷாந்த் நாராயாணன் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து IANS-செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2017ம் ஆண்டு மலையாள படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் தயாரிப்பாளர் தாமஸ் பனிக்கருடன் நடிகர் பிரஷாந்த் நாராயணன் நெருக்கமானார். இதையடுத்து, தனது மனைவியின் தந்தை மும்பையில் தயாரிப்பு கம்பெனி வைத்திருப்பதாகவும், அதில் பணம் முதலீடு செய்தால், இயக்குநராகலாம் என பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்காக தயாரிப்பாளர் தாமஸ் பனிக்கர் ரூ.1 கோடியே 20 லட்சம் முன்பணம் கொடுத்ததாகவும், ஆனால் ஒப்பந்தப்படி எதுவும் நடக்கவில்லை என்பதால் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது, பிரஷாந்த் நாராயணன் பணத்தை தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் பிரஷாந்த் மீது கேரள நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தாமஸ் வழக்குத் தொடரந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிரஷாந்த் மற்றும் அவரது மனைவியை வரும் செப்.20ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கைது செய்யப்பட்டுள்ள பிரஷாந்த் தலச்சேரி சிறையில் அடைக்கப்பட்டார்.