www.garudabazaar.com

நம்ம லொள்ளு சபா மனோகர் இவ்ளோ கஷ்டத்துல இருக்காரா?- பார்க்கும் போதே மனசு வலிக்குது !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லொள்ளுசபா மனோகரின் தற்போதைய நிலையை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் இருக்கின்றனர். அவருடன் நடித்த அனைவரும் முன்னுக்கு வந்துவிட, நீங்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

 

lollu sabha manohar real life made people Anxiety

சினிமா நட்சத்திரங்கள் என்றாலே எல்லாருக்கும் ஞாபகங்கள் வருவது ஆடம்பர வாழ்க்கை, சொகுசு கார் தான். ஆனால், அதில் இன்னும் ஒரு சில பேர் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நம்மில் பலரும் அறியாதது. அதில் ஒருவர் தான் "லொள்ளுசபா மனோகர்". லொள்ளுசபா  என்றாலே மனோகர் தான் நினைவுக்கு வருகிறது. லொள்ளு சபாவில் தன் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம்  சினிமா பட வாய்ப்புகள் வந்தது.

lollu sabha manohar real life made people Anxiety

அவர்  நடிப்பை பல பேர் பாரட்டியுள்ளனர். அவர் மனைவி கேட்கும் அதே கேள்வியை தான் பல பேர் கேட்டனர். ஏன் நீங்கள் இன்னும் வீடு கட்டவில்லை என்று? சினிமா என்றாலே பல கோடிகள் புரளும் என்று சொல்வார்கள். ஆனால் அவருக்கு சினிமா என்றாலே கோடியில் புரளும் அதில் சில கேடிகளும் உள்ளனர் என்று கூறுகிறார். லொள்ளுசபா  மனோகருக்கு கதை, வசனம் எழுதுவதில் ஆர்வம் இருந்திருக்கிறது. அவர்  ஒரு நாள் ஓர் விளம்பர அறிவிப்பு பலகையில் வசனம்  எழுத ஆட்கள் தேவை என்று போடப்பட்டிருந்ததை பார்த்து, அந்த நபரிடம் கதை எழுதுவதை பற்றி பேசினார்கள். அந்த கதை தான் "தெய்வம் தந்த வீடு " அதில் அவருக்கு நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

தற்போது இவர் வசிக்கும் வீட்டைப்பார்த்து மக்களும் திரையுலகினரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். பல கிராமங்களிலிருந்து மஞ்சப்பை எடுத்துக்கொண்டு சினிமாவை நோக்கி வரும் ஒவ்வொருவரும் மஞ்சப்பை நிறைய பணம் சம்பாதிப்பது இல்லை. அதுபோல் நான் சம்பாதித்தும் மஞ்சப்பை என்னுடன் நிரந்தரமாக இல்லை எனவும் கூறினார். ஒரு தயாரிப்பாளரிடம் இதுவரை 10 லட்சம் ஏமாந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தொடக்கத்தில் கதை வசனம் எழுதவே சினிமாவிற்கு வந்தார். இவர் நாளடைவில் சில வாய்ப்புகள் வந்து நடிகராக மாறிவிட்டார். இவர் நடித்த முதல் பகுதியை அனைவரது பாராட்டையும் பெற்றது. அதனால் அதைத் தொடர்ந்து செய்தார். இவர் வங்கியிலும் பணிபுரிந்து கொண்டே சினிமாவில் நடித்தவர். இன்று வரையிலும் இவரும் சந்தானமும் இணைந்து நடித்த அனைத்து சூப்பர் ஹிட் ஆகும். மேலும் இவர் தனது வங்கிப் பணியை தொடர்ந்து செய்து கொண்டே இருந்ததால் அவ்வப்போது சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் சக நண்பர்கள் நிறைய படங்களில் நடிப்பதைப் பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டதாகவும் அவர்களை நான் என்னைப் போலவே பார்க்கிறேன் எனவும் கூறினார்.

lollu sabha manohar real life made people Anxiety

காதல் FM என்ற படத்தின் மூலம் கருணாஸ் உடன் இணைந்து முதல் முதலாக படங்களில் பணியாற்றினார். அதற்கு முன், தனது வங்கியின் பக்கத்தில் இருந்த விஜய் டிவியில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து வாய்ப்பு கேட்டு, அதன்பின் விஜய் டிவியிலிருந்து படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். நாடக நடிகரான இவர், ஆரம்பத்தில் நாடகங்களில் அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிறகு  சினிமாவில் தன்னை ஒரு காமெடியான ஆகவே நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கு அவர் அதையே தொடர்ந்து செய்தார்.

தற்போது வரை நடிகர் சந்தானம் மற்றும் யோகி பாபு இருவரும் படங்களில் வாய்ப்பு அளித்து வருகின்றனர் எனவும் ஜெயா டிவியில் இவர் நடித்த சினிமா சினிமா என்ற நிகழ்ச்சியின் சில பகுதிகளில் தொகுப்பையும் பற்றி சுவாரசியமாக கூறினார். லொள்ளு சபா மனோகரின் வாழ்க்கை கதை  கூறுவது எல்லா நடிகர்களின் வாழ்க்கைக்கு பின் வெளியே சொல்ல முடியாத சோகங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள், துக்கம் மற்றும் வலி நிறைந்ததாகவே இருக்கிறது. இறுதியாக தனது ஆசையான வீட்டை கட்டுவதே இலக்கு எனவும் கூறினார்.

நம்ம லொள்ளு சபா மனோகர் இவ்ளோ கஷ்டத்துல இருக்காரா?- பார்க்கும் போதே மனசு வலிக்குது ! வீடியோ

lollu sabha manohar real life made people Anxiety

People looking for online information on லொள்ளுசபா, லொள்ளுசபாமனோகர், Lollusabha, Lollusabhamanohar will find this news story useful.