www.garudabazaar.com

வேற வழி தெரியல போல... அதான் அவரே 'களத்துல' எறங்கிட்டாரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸின் 4-வது சீசன் தற்போது 75 நாட்களை கடந்துள்ளது. ஆரி, ஆஜீத், அர்ச்சனா, பாலாஜி, அனிதா, சோம், ரியோ, ஷிவானி, கேப்ரியலா மற்றும் ரம்யா என மொத்தம் 10 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். இந்த வாரம் நாமினேஷனில் யார் வெளியேறுவார்கள் என்பது தெரியவில்லை. அர்ச்சனா வீட்டின் தலைவராகி விட்டதால் ஷிவானி, ஆஜீத் இருவரில் ஒருவர் வெளியேறலாம் என்பது ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.

He is Speak Very softly, Netizens trolled Bigg Boss

இந்த நிலையில் பிக்பாஸ் தனது கண்டிப்பை சுத்தமாக இழந்து விட்டார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சீசன்களில் எல்லாம் ஆங்கிலம் பேசினால் பெரிதாக கண்டிப்பார். மேலும் மிகவும் கண்டிப்பான குரலில் மட்டுமே போட்டியாளர்களிடம் பேசுவார். இந்த சீசனில் எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. போட்டியாளர்களை செல்லப்பெயர் வைத்து கூப்பிடுவது.

அவர்களை அடிக்கடி அழைத்து பாராட்டுவது, மென்மையாக பேசுவது என அவரும் ஒரு போட்டியாளர் போலவே மாறிவிட்டார். போட்டியாளர்கள் எப்படி தங்களை அழைக்க வேண்டும் என கூறுகிறார்களோ அப்படித்தான் அனைவரையும் அழைக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் போட்டியாளர்கள் கண்டெண்ட் கொடுப்பது போல தெரியவில்லை. அதனால் தான் அவரே களத்தில் இறங்கி விட்டார் போல என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

He is Speak Very softly, Netizens trolled Bigg Boss

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.