Eeramana Rojave 2 : சல்லிசல்லியாய் நொறுங்கிய ரம்யாவின் சூழ்ச்சி! அடுத்து பார்த்தி - காவ்யா திருமணமா?
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலின் இரண்டாவது சீசன் பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.
![eeramana rojave 2 Sensational Episode Parthi Kavya Marriage eeramana rojave 2 Sensational Episode Parthi Kavya Marriage](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/eeramana-rojave-2-sensational-episode-parthi-kavya-marriage-photos-pictures-stills-1.jpg)
அண்மையில்தான் பார்த்தியின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தியதால் பார்த்தியை விட்டு விலகக் கூடிய முடிவை காவ்யா உறுதியாக எடுத்தார். இதற்கு காரணம் காவ்யா யாரையோ பார்த்திக்கும் முன்பாகவே காதலித்ததாக பார்த்தியின் அம்மா பார்வதிக்கு தெரிய வந்தது தான். ஒரு வழியாக பார்த்தியும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுத்து விட்டார். ஒருவேளை காவ்யாவிற்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று ஒரு கடிதத்தையும் பார்த்தி காவ்யாவுக்கு எழுதியிருந்தார்.
இதனிடையே பார்த்திக்கு, தன்மகள் ரம்யாவை திருமணம் செய்து வைக்க தேவி சூழ்ச்சி செய்து அதை திருமணம் வரை கொண்டு வந்து விட்டார். அப்போது பார்த்தி எழுதிய கடிதம் கிடைத்து, நேரில் வந்த காவ்யாவை தேவி ஆள் வைத்து கடத்த முயற்சித்தார். அதை ஜீவா தடுத்து விட்டார். இன்னொரு புறம் ஜேகே மூலம் தேவியின் சூழ்ச்சிகளை அறிந்த பார்வதி, தேவியிடம் விசாரிக்க, தற்காலிகமாக பார்வதியை பின்மண்டையில் கட்டையால் தாக்கி ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு வந்து விட்டார் தேவி.
ஆனால் பார்வதி தப்பித்து வர, ஜேகேவும் தப்பித்து வர, அனைவருக்கும் தேவி மற்றும் ரம்யாவின் சூழ்ச்சி தெரிய வந்துவிட்டது. அதை முதலில் தேவி மறுக்கிறார், ஆனால் ஜேகே சொன்ன விபரங்கள் நம்பகத்ன்மையாக இருந்ததால் அனைவரும் நம்பி விடுகின்றனர்.
குறிப்பாக தொடக்கத்தில் பார்த்தியை ப்ரியா திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தும் வகையில் ப்ரியாவை தேவி கடத்தினார். அப்போது ப்ரியாவையும் ஜீவா தான் காப்பாற்றி அழைத்து வந்தார். ஆனால் அதற்குள் பார்த்தி - காவ்யா திருமணம் அரங்கேறி விட்டது. இதனால் ப்ரியாவை ஜீவா திருமணம் செய்து கொண்டார். இந்த உண்மைகளும் இப்போது தெரியவர, தேவியை அனைவரும் திட்டினர். ஆனாலும் தேவி மன்னிப்பு கேட்டு, தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டு, பார்த்தியின் அப்பா அருணாச்சலத்திடம் தன் மகள் ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்கும்படி கெஞ்சினார்.
ரம்யாவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பார்த்தியிடம் கெஞ்சினார். ஆனால் பார்த்தியோ, தான் காவ்யாவை விரும்புவதாகவும் தாங்கள் இருவருமே சேர்ந்து வாழ முடிவெடுத்ததாகவும் ரம்யாவிடம் தன்மையாக சொல்கிறார். ஆனால் இதை தாங்கிக் கொள்ளாத ரம்யா, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்ள, அவரை அனைவரும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டனர். இப்போது பார்த்திக்கும் காவ்யாவுக்கும் மீண்டும் திருமணம் செய்து வைக்க பெரியவர்கள் எண்ணிய போது, காவ்யாவோ, இவ்வளவு அவசர அவசரமாக இப்படி திருமணம் செய்ய வேண்டாம். கொஞ்ச நாள் ஆகட்டும், நிதானமாக திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
இப்படி ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஒரு வாரமாக பரபரப்பான கட்டத்தில் இருந்த நிலையில் தற்போது அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்து விட்டன.