www.garudabazaar.com

பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - மருத்துவ அறிக்கை குறித்த தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலையின் பின்னடைவு ஏற்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Details about Singer SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் உடல்நிலை குறித்து தகவல்

அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்பிபி சரண், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்தார். மேலும் இந்நிலையில் நேற்று மாலை அவர் அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் மருத்துவமனை, பாடகர் எஸ்பிபியின் உடல்நிலை கடந்த 24 மணி நேரமாக கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவர்கள் உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்து.

இந்த செய்தி நாடுமுழுவதும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், மருத்துவ அறிக்கை இன்னும் 1 அல்லது 2 மணி நேரங்களில் வெளியாகக்கூடும் என்றும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பியின் மனைவி சாவித்திரி, மகன் எஸ்.பி.சரண், மகள் பல்லவி, சகோதரி எஸ்.பி.சைலஜா எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு தற்போது வந்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  இயக்குநர் பாரதிராஜாவும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Details about Singer SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியமின் உடல்நிலை குறித்து தகவல்

People looking for online information on SP Balasubrahmanyam, SPB will find this news story useful.