தந்தை இறந்த சோகத்தில் இருந்த அனிதா... ரியோவின் மனைவி உருக்கமாக செய்த செயல்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரு வாரங்களுக்கு முன்பு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அனிதாவின் தந்தை எழுத்தாளர் சம்பத் அவர்கள் சமீபத்தில் இயற்கை எய்தினார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அனிதா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அனிதா சம்பத்திடம் ரசிகர் ஒருவர் "ஆறியுடன் மட்டுமல்ல ரியோவுடனும் கூட உங்களுக்கு ஆரம்பத்தில் நல்ல சுமுகமான உறவு இருந்தது. ஆனால் பின்பு மனஸ்தாபங்கள் அதிகரித்து இருவரும் பிரிந்து விட்டீர்கள். வெளியே வந்த பிறகு அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறன். வெளியிலும் உங்களுக்கு நல்ல சுமுகமான உறவு நீடிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

biggboss anitha clarification on rio fight ரியோவின் மனைவி உருக்கமான செயல்

அதற்கு பதிலளித்த அனிதா " பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சண்டைகள் எல்லாம் பிக்பாஸ் வீட்டில் மட்டும்தான். ரியோவுக்கும் எனக்கும் முதல் வாரத்தில் மிக சிறந்த அண்ணன் தங்கை உறவு  இருந்தது. எனது அப்பாவின் மரணத்திற்குப் பிறகு கூட ரியோவின் மனைவி ஸ்ருதி என்னை போனில் அழைத்து பேசினார். இதுதான் வாழ்க்கை. நீங்க பிக்பாஸில் பார்க்கிறது எல்லாம் மாயை. அங்க நடந்த சண்டைகளை நினைத்தால் சிரிப்புதான் வரும் என்று நினைக்கிறன்" என்று கூறியுள்ளார்.

Tags : Anitha, Rio

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss anitha clarification on rio fight ரியோவின் மனைவி உருக்கமான செயல்

People looking for online information on Anitha, Rio will find this news story useful.