பாலாஜியின் தந்தை மரணம் அடைந்த சோக செய்தி கேட்டு ஆரி செய்த செயல்... உருக்கமான பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த சீசனில் ஆரி பாலா சோம் ரியோ மற்றும் ரம்யா என ஐந்து பேர் இறுதிப்போட்டிக்கு சென்ற நிலையில் ஆரி பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்நிலையில் இந்த சீசனில் அனைவரது கவனத்தையும் பெற்று முக்கிய போட்டியாளராக மாறியவர் பாலாஜி. அவர் அடிக்கடி கூறுவது போல தன்னுடைய சொந்த முயற்சியினால் இத்தனை  உயரங்களை அடைந்துள்ளார். இந்நிலையில் பாலாஜியின் குடும்பத்தில் சோக நிகழ்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. அவரது தந்தை தற்போது மரணம் அடைந்துள்ளார்.

aari's heartfelt condolecense to balaji family ஆரி செய்த உருக்கமான செயல்

பாலாஜியின் பெற்றோர்கள் தேனி மற்றும் மதுரையை சேர்ந்தவர்கள். நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் பாலாஜிக்கு சிறுவயது அனுபவங்கள் பலவும் அத்தனை நன்றாக இல்லை. கடந்து வந்த பாதை டாஸ்கின் பொழுது கூட அவர் தனது குடும்பத்தை பற்றி சொன்ன கதை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தந்தையாரின் இறுதி சடங்கில் அவர் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியான நிலையில், இந்த செய்தியை கேள்விப்பட்ட ஆரி இது பற்றி தற்போது பதிவிட்டுள்ளார். அவர் கூறும் பொழுது "பாலாஜி முருகதாஸின் தந்தை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான சூழ்நிலையில் அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் மனவலிமை கிடைக்கட்டும்" என்று கூறியுள்ளார். அதேபோல் சனம் செட்டி கூறும்பொழுது "பாலாஜி முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது தந்தையின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் கஷ்ட நேரத்தில் ஒருவரை ஒருவர் தாங்கும் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பாலாஜியின் தந்தை மரணம் அடைந்த சோக செய்தி கேட்டு ஆரி செய்த செயல்... உருக்கமான பதிவு! வீடியோ

Tags : Aari, Balaji

தொடர்புடைய இணைப்புகள்

aari's heartfelt condolecense to balaji family ஆரி செய்த உருக்கமான செயல்

People looking for online information on Aari, Balaji will find this news story useful.