Video - "இன்னைக்கு சனத்துக்கு நடந்தது நாளைக்கு".... வேதனையில் ஆரி சொன்ன வார்த்தைகள்...!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான போட்டியாக கருதப்பட்ட நடிகை சனம் போட்டியில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. காரணம் மனதில் பட்டதை நேர்மையாகவும் தைரியமாகவும் கூறும் பழக்கம் உடையவர் சனம் செட்டி. இதனால் அந்த வீட்டில் சிலரது எதிர்ப்பை சம்பாதித்தாலும், மக்கள் அவரை பல சமயங்களில் பாராட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நேற்றைய தினம் சமூக வலைதளங்களில் #NoSanamNoBiggboss என்ற ஹேஷ்டேக் வைரலானது.

இந்நிலையில் சற்று முன் வெளியாகியிருக்கும் விஜய் டிவி புரோமோவில் பாலா ஆரி இருவரும் சனம் வெளியேற்றதை பற்றி பேசிக்கொண்டு உள்ளனர். அவர்கள் கூறும் பொழுது "இன்னைக்கு சனத்திற்கு நடந்தது தான் எனக்கும் நடக்கும். தனியே விளையாடும் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டால் அந்த குரூப் நினைப்பது தான் நடக்கும்" என்பது போல் அவர் கூறுகிறார்.
தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் பாலா, ஆரி உடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது 'ஷிவானியையும் பேக் செய்து அனுப்பி விடுவார்கள்" என்பது போல் கூறுகிறார். அவருடைய கணிப்பு கணிப்பு சரியா, தவறா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
VIDEO - "இன்னைக்கு சனத்துக்கு நடந்தது நாளைக்கு".... வேதனையில் ஆரி சொன்ன வார்த்தைகள்...! வீடியோ