'தம்பி...தம்பி...ஒரு நிமிஷம்'!...அன்புமணியை கேள்விகளால் துளைத்த செய்தியாளர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 25, 2019 03:53 PM

அதிமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்து வந்த பாட்டாளி மக்கள் கட்சி,தற்போது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் பாமகவை கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.

Anbumani Ramadoss talks about the alliance between PMK and ADMK

இதுதொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக, சென்னை தி.நகர் பாண்டி பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று காலை அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது செய்தியாளர்கள் அன்புமணியை கேள்விகளால் துளைத்து எடுத்தார்கள்.இருப்பினும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் அன்புமணி பதிலளித்தார்.ஆனால் அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் கொடுத்த ஊழல் புகார் குறித்த கேள்விக்கு பதிலளிக்க தடுமாறினார்.

செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு டென்ஷனாகி ''அவருக்கு தண்ணீர் கொடுங்க பா,நாகரீகமாக நடந்துக்கோங்க,ஏன் உங்களுக்கு பொறுமை இல்லையா,என சற்று கோபப்பட்டார்.இதனிடையே அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத், பாமக கூட்டணி குறித்து திடீரென கடுமையாக விமர்சித்தது குறித்த கேள்வியால் மிகவும் நொந்து போன அவர் 'ஒரு எம்.பி. சீட்டுக்காக 30 ஆண்டுகால உறவை மறந்து, விஷ்ணுபிரசாத் இப்படி விமர்சிப்பார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. குறிப்பாக, எனது மனைவி தான் இந்த விஷயத்தில் மிகவும் வேதனை அடைந்தார் என கூறி பெட்டியை முடித்து விட்டு எழுந்து சென்றார்.

அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டியின் முழு விவரம் கீழே உள்ள வீடியோ லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.