‘இது எப்டி இருக்கு’.. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு கோலியின் வைரல் பாராட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Feb 27, 2019 03:49 PM

இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி வித்தியாசமான முறையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Kohli sums up India\'s mood with an inspiring Facebook post

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளால் நடந்த கொடூரத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக விமானப்படை தெரிவித்தது.

இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று இந்திய வான் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு போர் விமானங்கள் இந்திய ராணுவத்தால் விரட்டப்பட்டன. அதில் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படைத் தெரிவித்துள்ளது.

இதனால் எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதனை அடுத்து ஷிம்லா, புந்தார், காகல் ஆகிய விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும் டெல்லிக்கு வடக்கே பயணிகள் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் வித்தியாசமான முறையில் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

கோலியின் பேஸ்புக் பக்கத்தில்,‘எப்படி எங்கள் உத்வேகம்?’என கிரிக்கெட் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பதிவிட்டு இந்திய விமானப்படைக்கு தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

Tags : #VIRATKOHLI #INDIANAIRFORCE #IAFSTRIKES #INDVAUS