'உங்களுக்கு ராயல் சலுயூட்'...தீவிரவாத முகாம்கள் அழிப்பு...'இந்திய விமான படைக்கு குவியும் பாராட்டுகள்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Feb 26, 2019 10:15 AM

புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 40 துணை ராணுவத்தினர் உயிரிழந்த நிலையில்,அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் நடத்தியுள்ளது.

Political Leaders react on IAF strike on Jaish camps

இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 12 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.சர்ஜிகல் ஸ்ட்ரைக்கை போன்று நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 100 சதவீதம் வெற்றிகரமாக முடிந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதலுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்கள்.