'இத விட அழகான தருணம் இருக்குமா'?... 'பிறந்த அடுத்த நொடி பச்சிளம் பெண் குழந்தை செஞ்ச கியூட் செயல்'... வைரலாகும் மருத்துவரின் பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Oct 16, 2020 05:05 PM

பிரச்சனைகள் நிறைந்த இந்த உலகில் மனிதனின் ஒவ்வொரு நொடியும் ஒரு நம்பிக்கையில் தான் நகர்ந்து கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா காரணமாக உலகமே ஒரு நிம்மதியற்ற சூழலில் சிக்கியுள்ள இந்த தருணத்தில் இந்த நிலையும் மாறும் என சொல்லாமல் சொல்லியுள்ளது ஒரு பச்சிளம் குழந்தை.

Newborn baby pulls doctor’s face mask in Dubai

துபாயைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவ நிபுணர் சமர் செயிப். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படம் ஒன்று தற்போது உலகளவில் வைரலாகி வருகிறது. துபாயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஒன்று பிரசவ வார்டில் பணியிலிருந்த அவரின் மாஸ்க்கை கழட்டியெறிய முயன்றுள்ளது.

இதனையடுத்து ''நாம் எல்லோரும் மாஸ்க்கிற்கு விடை கொடுக்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான சிக்னல் கிடைத்துள்ளது'' என்ற கேப்ஷனுடன் அந்த படத்தைச் சமர் செயிப் பகிர்ந்துள்ளார். பலரையும் கவர்ந்துள்ள அந்த புகைப்படம் பலருக்கும் புதிய நம்பிக்கையை அளிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Newborn baby pulls doctor’s face mask in Dubai | World News.