'தமிழகத்தின் இன்றைய கொரோனா அப்டேட்...' எந்த மாவட்டம் முதல் மற்றும் ரெண்டாவது இடம்...? - மேலும் முழுத் தகவல்கள்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Aug 31, 2020 06:25 PM

தமிழகத்தில் இன்று (31-08-2020) ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tn corona virus updates and statistics as on august 31

கொரோனா பாதிப்படைந்த 5,956 பேரில் 5,925 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும், 31 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று சுகாதார துறை குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மொத்தம் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,28,041 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 52,578 ஆக உள்ளது.

இன்று கொரோனா உறுதி செய்யப்பட்ட 5,956 பேரில் ஆண்கள் 3,533 மற்றும் பெண்கள் 2,423 ஆகும்.

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,35,597 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 589 பேருக்கும், சேலத்தில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 347 பேருக்கும் கடலூரில் 307 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 6,008 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுமுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,68,141 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொருத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 56 பேர், தனியார் மருத்துவமனையில் 35 பேர் என மொத்தம் 91 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,322 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 46,52,867 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tn corona virus updates and statistics as on august 31 | Tamil Nadu News.