தமிழகத்தில் மேலும் 57 பேர் கொரோனாவுக்கு பலி!.. சென்னையில் தொற்று குறைகிறதா?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Oct 16, 2020 06:52 PM

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,389 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

tamilnadu covid19 upd0ates and statistics as an october 16

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் மேலும் 4,389 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,79,191 ஆக உயர்ந்துள்ளது. பாலின ரீதியாக மொத்தம் 4,10,208 ஆண்களும், 2,68,951 பெண்களும், 32 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,529 ( இன்று 57) ஆக உயர்ந்திருக்கிறது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,27,703 ( இன்று 5,245) ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 40,959 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1140 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,87,852 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தற்போதுவரை 87,66,038 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், இன்று மட்டும் 89,497 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu covid19 upd0ates and statistics as an october 16 | Tamil Nadu News.