darbar USA others

'பெற்ற' மகளின் கண்முன்.... குடும்பத்துடன் 'சேர்ந்து' செய்த சம்பவம்.... விரக்தியில் தாயின் அதிர்ச்சி முடிவு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Jan 13, 2020 02:47 PM

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இளநீர்குன்றத்தை சேர்ந்தவர் மனோன்மணி(52). கணவரை இழந்தவர். இவரது மகள் மகாலட்சுமி(23). இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 29-ம் தேதியன்று, வழக்கம்போல் பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. விசாரித்ததில், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(27) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

mother\'s shock result in the frustration of the incident .

இதையடுத்து, மனோன்மணி கடந்த ஒன்பதாம் தேதி மணிகண்டன் வீட்டிற்கு சென்று மகளை அழைத்தார், அவர் வர மறுத்தார். மனோன்மணி மீண்டும் மகளிடம் வற்புறுத்தியத்தைக் கண்ட மணிகண்டன் ஆத்திரமடைந்தார். கோபமடைந்த மணிகண்டன் மற்றும் அவரது சகோதரர் சூர்யா(25), தந்தை முருகன்(54), தாய் லட்சுமி(52) ஆகியோர் சேர்ந்து மகாலட்சுமியின் முன்வைத்து மனோன்மணியை சரமாரியாக தாக்கினர்.

படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தங்கி சிகிட்சை பெற்றார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய மனோன்மணி, நேற்று முன்தினம் விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை மீட்டு, சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப்பின் மனோன்மணி உயிர் தப்பினார். இதுகுறித்து அனக்காவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : ##LOVE ##ATTACK