"10 நாள் முன்னாடி பாக்குறப்போ மூச்சு எறைக்குதுன்னு சொன்னான்".. மயில்சாமி பத்தி மனோபாலா சொன்ன தகவல்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Feb 21, 2023 04:10 PM

நடிகர் மயில்சாமி கடந்த சிவராத்திரியன்று கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் இரவு முழுவதும் சிவனை தொழுது அதிகாலையில் கிளம்பி இருந்தார். வீட்டுக்கு திரும்பிய மயில்சாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட அவரை மருத்துவமனை அழைத்து சென்ற சூழலில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.

Manobala opens up about his last conversation with mayilsamy

Also Read | "போலீஸ் படம் பாக்குறதே ஒரு தெம்பு".. பிரம்மாண்டமாக நடந்த தீர்க்கதரிசி இசை வெளியீட்டு விழா!!

இதனைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தவும் செய்திருந்தனர். தொடர்ந்து மயில்சாமி உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்ட சூழலில் அவரது மறைவு பலரை வாட்டியும் வருகிறது.

சினிமாவில் சிறந்த நடிகராக மயில்சாமி வலம் வந்த அதே சூழலில் தன்னிடம் உதவி என்று கேட்போருக்கு தன்னிடம் இல்லை என்ற சூழலிலும் கூட மற்றவரிடம் வாங்கியாவது தக்க நேரத்தில் உதவி செய்யும் பழக்கத்தை கொண்டிருந்தார். உதவி என வருபவர்களை வெறும் கையுடன் அனுப்பும் பழக்கம் இல்லாத மயில்சாமியின் மறைவு பற்றி பலரும் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக நடிகர் மயில்சாமி குறித்து நிறைய விஷயங்களை உருக்கத்துடன் நடிகர் மனோபாலா பகிர்ந்து கொண்டார்.

Manobala opens up about his last conversation with mayilsamy

அப்போது, கடைசியாக மயில்சாமியிடம் பேசிக் கொண்டது பற்றி மனம்திறந்த மனோ பாலா, "நான் பத்து நாளைக்கு முன்னாடி மயில்சாமியை சந்திக்கும் போது, 'என்னப்பா உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்கன்னு' கேட்டேன். 'ஆமாப்பா, கொஞ்சம் பாடில டிங்கரிங், பெயிண்டிங் எல்லாம் இருந்துச்சு. அது கொஞ்சம் சரி பண்ணேன். அடிக்கடி மூச்சு எறைக்குது. அசந்து தூங்கணும் போல தோணுது. அதுனால வீட்டுல போய் படுத்து தூங்கிடுறேன். பிள்ளைகள் எல்லாம் வளர்ந்துருச்சுல்ல, அதனால ஒரு எந்த கவலையும் இல்லை. ஆனா பார்ப்போம், ஓடுறது வரைக்கும் ஓடட்டும், என்ன சொல்ற மாமா.

அப்புறம் வீட்டுக்கு வா. எனக்கு வந்து நீ வைக்கிற வத்தல் குழம்பு ரொம்ப பிடிக்கும். அப்படியே புளியோதரையும் செஞ்சு கொடுத்து விடு' அப்படின்னு கேட்டவன் தான். சரி நானும் இந்த வாரம் கடைசிக்குள்ள அவனுக்கு செஞ்சு வீட்டுக்கு அனுப்பணும்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். குடுப்பினை இல்லை" என கலங்கிய நிலையில் மனோபாலா பேசினார்.

Also Read | Pa. ரஞ்சித்துடன் Facebook-ல Chat பண்ணிய மோகன் ஜி.. அவரே சொன்ன தகவல்.

Tags : #MAYILSAMY #MANO BALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Manobala opens up about his last conversation with mayilsamy | Tamil Nadu News.