கான்பரன்ஸ் CALL-ல் திவ்யா ஸ்ரீதர் முன்பே அர்ணவிடம் I LOVE U சொன்ன நடிகை..! வெளியான ஆடியோ

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Oct 12, 2022 02:46 PM

பிரபல சின்னத்திரை நடிகராக இருந்து பல்வேறு முன்னணி தொலைக்காட்சிகளில் தொடர்களில் நடித்து வருபவர் நைனா முகமது தற்போது அர்ணவ் என்கிற பெயரில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் திவ்யா ஸ்ரீதர் என்ற சீரியல் நடிகையை காதலித்த நிலையில் இஸ்லாமிய மத முறைப்படியும், இந்து மத முறைப்படியும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Divya Sridhar Arnav and actress conference audio call

இதனிடையே அர்ணவ் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்ட அர்ணவ், வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதுடன், தன்னிடம் இருந்து விலகி செல்வதாகவும், தன்னுடனான எந்த திருமண ஆதாரத்தையும் வெளியிட கூடாது என சொல்வதாகவும், தன் பெற்றோரிடம் சம்மதம் வாங்காததால் விவாகரத்து செய்துவிடவும் தயாராக இருப்பதாக கூறுவதாகவும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் தான் கர்ப்பிணியாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்ததால் தன்னை அர்ணவ் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும், தன்னை எட்டி உதைத்து, தன் கரு கலையும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்கும் தன்னை வந்து தன் கணவர் பார்க்க கூட இல்லை என்றும், குற்றம் சாட்டி, திருமண புகைப்படங்கள், போன் கால் ரெக்கார்டிங்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் சன் டிவி செவ்வந்தி சீரியலின் நடிகை திவ்யா ஸ்ரீதர் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அர்ணவ், “நான் திவ்யா ஸ்ரீதரை அடித்ததாக சொல்லப்படும் வீட்டில் நான் அந்த நேரத்தில் இல்லை. அதுசம்மந்தப்பட்ட சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. இது வழக்கமான குடும்ப பிரச்சனைதான். நான் நடிப்பு துறையில் இருப்பதால், அவர் பொசசிவாக இப்படி நடந்துகொள்கிறார். அதற்கு அவரது நண்பர்களின் ஆலோசனையும் காரணம். நான் அவரை அடிக்கவில்லை. அவர்தான் சொல்ல போனால் என்னை அடித்தார்.

ஆனால் கரு கலைந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அவர் கூறுவது, கருவை கலைப்பதற்கான சதியாக நான் கருதுகிறேன்., முறையான மருத்துவ ரிப்போர்ட் வரவேண்டும். எனக்கு என் குழந்தை வேண்டும். அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆதார்ப்பூர்வமற்றவை, அவருடைய வக்கீலிடமும் நான் இதையே கூறியிருக்கிறேன். சம்மந்தப்பட்ட ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம் பேசி வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்தான், அர்ணவ், திவ்யா ஸ்ரீதர் மற்றும் நடிகை அன்ஷிதா பேசியதாக கூறப்படும் கான்ஃப்ரன்ஸ் காலுக்கான ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், திவ்யா ஸ்ரீதரிடம் அன்ஷிதா,  “நான் உன் கணவரிடம் பேசவில்லை. நான் அர்ணவிடம் பேசுகிறேன்” என சொல்வதுடன் அவருக்கு ஐ லவ் யூ சொல்லி போனில் முத்தம் கொடுக்கிறார். இதேபோல், “அன்ஷிதா நம் வாழ்க்கையை எவ்விதத்தில் ஸ்பாயில் பண்ணுவதாக சொல்கிறாய் என புரியவில்லை?” என திவ்யா ஸ்ரீதரிடம் கேட்கிறார். திவ்யா ஸ்ரீதரோ, அர்ணவிடமும், அன்ஷிதாவிடமும் தன் முன்பே தன் கணவரிடம் ஒரு பெண் இப்படி பேசுவதும், கணவர் அப்பெண்ணின் பேச்சு குறித்து எதுவும் கேட்காமல் இருப்பதும் எந்த வகையில் நியாயம் என அந்த போன் காலில் கேட்பதாக அந்த ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்த விசாரணைகள் போய்க்கொண்டிருப்பதாக தெரிகிறது.

Tags : #ARNAV #DIVYA SRIDHAR

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Divya Sridhar Arnav and actress conference audio call | Tamil Nadu News.