திடீரென அதிகரித்த எண்ணிக்கையால் 'கலங்கித்தவித்த' மக்கள்... 40 நாட்களுக்கு பின் 'மீண்டு' வந்த தமிழக மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Aug 05, 2020 05:38 PM

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அதே நேரம் தென் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

Coronavirus Cases reduced in Madurai after 40 days

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் கொரோனா தொற்று எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் இருந்தது. இதையடுத்து அங்கு மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. இதையடுத்து, கொரோனா தற்போது அங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் இரட்டை இலக்கத்தில் இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை சுமார் 40 நாட்களுக்கு பின் உச்சம் குறைந்துள்ளது. இதுவரை 4,348 நடமாடும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அதில் 2,39,000 பேர் பரிசோதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7% இருந்து 3% குறைந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coronavirus Cases reduced in Madurai after 40 days | Tamil Nadu News.