'சென்னைவாசிகளுக்கு தித்திப்பான செய்தி'... 'தொடங்கவிருக்கும் புறநகர் ரயில் சேவை'... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Oct 02, 2020 03:31 PM

சென்னை புறநகர் ரயில் சேவை அக்டோபர் 5-ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai Suburban trains to run from Oct 5

கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் அனைத்து வகையான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. பொது முடக்கம் தொடர்ந்து அமலிலிருந்து வரும் நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் முதல் பேருந்து சேவையைத் தமிழக அரசு தொடங்கியது. இதனால் அலுவலகம் செல்வோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதேபோன்று மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கிய நிலையில், தினமும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் புறநகர் ரயில் சேவை எப்போது தொடங்கும் எனச் சென்னைவாசிகள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். அவர்களுக்கு நற்செய்தியாக வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்கப்படும் என தெற்கு'ரயில்வே அறிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Suburban trains to run from Oct 5 | Tamil Nadu News.