'குடுங்க நான் கவனிச்சுக்கிறேன்'.. 'ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்'.. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 11:03 AM

சென்னை தாம்பரத்தில் ஒன்றரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

chennai man arrested for abusing one and half year old girl child

கூலித் தொழிலாளி ஒருவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. குழந்தைக்கு என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்க முடியாத பெற்றோர், குழந்தை அழுதுகொண்டே இருந்ததை அடுத்து, குழந்தையை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அப்போதுதான் குழந்தையின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, குழந்தைக்கு நேர்ந்த இத்தகைய கொடூர சம்பவம் பற்றி தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில், பெற்றோர் தரப்பில் இருந்து புகார் ஒன்றும் அளிக்கப்பட்டது. அதன் பின்னர் காவல் துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.

விசாரணையில், சில நாட்களுக்கு முன்பாக குழந்தையை பார்த்துக்கொள்வதாகக் கூறி பெற்றோரிடம் இருந்து குழந்தையை வாங்கிய ரமேஷ் என்கிற நபர்தான் குழந்தையிடம் இப்படி தகாத முறையில் கொடூரமாக நடந்துகொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : #CHENNAICHILDABUSE #POCSOACT