"டீமோட கேப்டனா நான் இருக்குறதுனால..." போட்டிக்கு பின் 'தோனி' கொடுத்த சிறப்பான 'SPEECH'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Oct 23, 2020 11:22 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியி தோல்வியடைந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.

Dhoni speech at post match session after defeat against mi

இதுவரை ஆடியுள்ள அனைத்து ஐபிஎல் சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ஒரே அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், இந்த முறை அந்த வாய்ப்பை இழந்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கு பின்னர் பேசிய சென்னை கேப்டன் தோனி, 'இந்த தோல்வி சற்று வேதனையாக தான் உள்ளது. இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை. இந்த சீசனில் ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டும் தான் சிறப்பாக விளையாடினோம். அனைத்து வீரர்களும் தங்களால் முடிந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், எப்போதும் நாம் நினைப்பது போல தான் நடைபெறுவது இல்லை.

நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத போது அதற்கான காரணங்கள் நூறு இருக்கும். அப்போது எல்லாம் நல்ல ஆற்றலுடன் தான் விளையாடுகிறோமா என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.  மீதமுள்ள 3 போட்டிகளில் சிறந்தவொரு ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு தொடருக்காக நல்ல முறையில் தயாராகி கொள்வோம். அணியின் கேப்டனாக எங்கும் ஓட முடியாது. அதனால் நான் அனைத்து போட்டிகளிலும் களமிறங்குவேன்' என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் நடைபெற்ற போட்டியில், போட்டி முடிந்த பின்னர் தோனி இளம் வீரர்கள் குறித்து பேசியது பரபரப்பை உருவாக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni speech at post match session after defeat against mi | Sports News.