'என்ன நரபலி கொடுக்க கொண்டு வந்துருக்காங்க...' 'வாய் பேச முடியாத பெண்ணை...' நரபலி கொடுத்தா 'அத' எடுத்திடலாம்...! அதிர்ச்சி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | May 22, 2020 07:18 PM

புதையலுக்காக வாய் பேசமுடியாத பெண்ணை நரபலி கொடுக்க முயன்ற உறவினர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Relatives who dared to kill the woman for the treasure

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வடிகண்ட்ரிகா கிராமத்தைச் சேர்ந்த சரஜம்மா. பிறவியிலிருந்தே வாய் பேசமுடியாமல் இருக்கும் சரஜம்மாவை புதையல் எடுப்பதற்காக அவரது உறவினரான சுப்பமா, சேஷாத்ரி தம்பதியினர் நரபலி கொடுக்க முயன்றுள்ளனர்.

இதற்காக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் ஏரியின் பக்கத்தில் அழைத்துச் சென்று  சரஜம்மாவை பூஜையில் உட்கார வைத்துள்ளனர். என்னவென்று தெரியாமல் உட்கார்ந்த சரஜம்மா சேஷாத்ரி கையில் கத்தி இருப்பதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளார்.

அங்கிருந்து தப்பித்து ஓடிய சரஜம்மா தன்னை நரபலி கொடுக்க இருப்பதாக அருகில் இருந்த கிராமத்தினருக்கு சைகை மூலம் அவர் தெரிவித்து உள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் சிலர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்க்கும் போது அங்கு பூஜை  பொருட்கள் இருந்ததை கண்டு அதிர்த்துள்ளனர். மேலும் சராஜம்மாவின் உறவினர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளனர்.

மேலும் எஸ்.ஆர். புரம் போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார் சராஜம்மாவின் மகன். போலீசார் தற்போது தலைமறைவாகி உள்ள அவரது உறவினர்களை தேடி வருகின்றனர்.

Tags : #TELENGANA

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Relatives who dared to kill the woman for the treasure | India News.