“மும்பை போலீஸை நம்பி புண்ணியம் இல்ல!”.. சுஷாந்த் மரண வழக்கில் பீகார் அரசு அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Aug 04, 2020 06:23 PM

எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடித்துப் பிரபலமானவர் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். 34 வயதான இவர் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Bihar CM approves CBI probe in Sushant Singh Rajput Death Case

பின்னர் சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, மோசடி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் அவருடைய முன்னாள் காதலி நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 6 பேர் மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்

இந்நிலையில் சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்துள்ள பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்ததையடுத்து பீகார் அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். இந்த சூழலில் சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க பிகார் அரசு பரிந்துரை செய்துள்ளது.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bihar CM approves CBI probe in Sushant Singh Rajput Death Case | India News.