''யாருமே இல்லாத கிரவுண்ட்ல விளையாட முடியாது தலைவா'' - தன் மீதான விமர்சனம் குறித்து யோகிபாபு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

யோகி பாபு தற்போது முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் 'தர்மபிரபு'. இந்த படத்துக்கு மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படத்தை ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்க, முத்துக்குமரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் யோகிபாபுவுடன் ராதாரவி, ரேகா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Yogi Babu speaks about his films Gurkha And Dharmaprabhu

இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய யோகிபாபு, இந்த படத்தில் நடிக்கும் போதே கூர்கா படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. இரண்டு பட இயக்குநர்களும் எனக்கு நண்பர்கள். அதனால் இரண்டு படங்களிலும் 45 நாட்கள் தூங்காமல் இரவு பகலாக நடித்துக் கொடுத்தேன்.

நான் அதிகமாக சம்பளம் வாங்கும் ஆள் இல்லை. தயாரிப்பாளர்களின் கஷ்டம் எனக்கு தெரியும். வெளியில் சொல்வதை நம்பாதீர்கள். யாருமே இல்லாத இடத்தை பிடிச்சாருனு என்னை பற்றி சொல்கிறார்கள். யாருமே இல்லாத கிரவுண்ட்ல விளையாட முடியாது தலைவா . எல்லோருமே இருந்தா தான் விளையாட முடியும். எல்லோரும் இருக்காங்க. அதுல விளையாடுறவங்க கிட்ட தான நம்ம டேலண்ட்டு. டீம் எல்லாம் சரியாக அமையும் போது நான் அடிக்கிறேன். மேட்ச் வின்னாகுது. என்றார்.

''யாருமே இல்லாத கிரவுண்ட்ல விளையாட முடியாது தலைவா'' - தன் மீதான விமர்சனம் குறித்து யோகிபாபு வீடியோ