''எப்போ இந்த வைரஸ் போய், நார்மலாகும்'' - ஃபோட்டோ பகிர்ந்து பிரபல டிவி தொகுப்பாளர் புலம்பல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியா முழுவதும் வருகிற மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலையுள்ளது. கொரோனாவில் இருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கின் போது பிரபலங்கள் பலரும் தங்கள் அன்றாட நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரபல டிவி தொகுப்பாளர் மணிமேகலை ஊரடங்கின் போது கிராமத்தில் தான் நேரம் செலவிடுவது குறித்து அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக உண்டிவில் விளையாடுவது போல் இருக்கும் ஃபோட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், எப்போ இந்த வைரஸ் போய் எப்போ எல்லாம் நார்மல் ஆகும். இந்த கடுப்பு ஃபீலுடன் தொடங்கியுள்ளது. என்று குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Eppo indha virus poyi eppo ellam normal aagum !🔫🛠⛓🗡🔪 Starting the day with kaduppu feeling 😡

A post shared by Mani Megalai (@iammanimegalai) on

Entertainment sub editor