பிரபல பத்திரிக்கையாளரின் மறைவிற்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று இரங்கல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் மிகவும் பிரபலமான பத்திரிக்கையாளர்களில் ஒருவர் நெல்லை பாரதி. இவர் எழுத்தாளரும் கூட. இந்நிலையில் நெல்லை பாரதி இன்று (ஏப்ரல் 3) அவர் வீட்டில் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

இவரது மறைவிற்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் பிரசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நெல்லை பாரதி நல்ல நண்பர், இனிமையான மனிதர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்'' என்றார்.

இதன் ஒரு பகுதியாக நடிகர் விஜய் சேதுபதி , நெல்லை பாரதியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது இழப்பால் பெரும் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Entertainment sub editor