அசுரனின் மாபெரும் வரவேற்புக்கு பிறகு வெற்றிமாறனின் அடுத்த படம் அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வட சென்னைக்கு' பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகியிருக்கும் படம் 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

Vetrimaaran's next film announced after Dhanush's Asuran

இந்த படத்தில் மஞ்சு வாரியர், டிஜே, கென்,  பசுபதி, பிரகாஷ்ராஜ், பாலாஜி சக்திவேல், 'ஆடுகளம்' நரேன், பவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் இதனையடுத்து வெற்றிமாறன், பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் கவிதை ஒன்றை படமாக்கவுள்ளதாகவும் அதில் பிரபல காமெடியன் சூரி முதன்மை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான எல்ரெட் குமார் தனது  RS Infotainment தயாரிப்பில் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.