Biggboss வீட்டுக்குள் Police. நடந்தது என்ன ? - வனிதாவின் வழக்கறிஞர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இத்தம்பதியினருக்கு ஜோதா என்கிற மகள் இருக்கிறார்.

Vanitha's Lawyer reveals about Police on Bigg Boss's house

இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2012 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். ஆனந்தராஜிடம் வசித்து வந்த மகள் ஜோவிதாவை கடந்த பிப்ரவரி மாதம் வனிதா கடத்தி சென்று விட்டதாக தெலங்கானா மாநில போலீஸில் புகார் அளித்தார்.

இதனையடுத்து வனிதா மீது அம்மாநில போலீஸார் அள்கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே நசரத் பேட்டை பகுதியில் உள்ள பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது.

இதனையடுத்து பிக்பாஸ் அரங்குக்குள் நுழைந்து காவல்துறையினர், வனிதாவிடம் விசாரணை நடத்திவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வனிதாவின் வழக்கறிஞர் ஸ்ரீதர் Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தை தொடர்பான வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்துல நிலுவையில் இருக்கிறது. குழந்தையை கடத்திவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று அவரை கைது செய்ய முயற்சித்திருக்கின்றனர்.

வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதனால் கைது செய்ய முடியாது என்றேன். ஆனால் அவர்கள் உறுதியாக இருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்களது குழந்தையை அழைத்து சென்றேன். குழந்தையிடம் தனியகா விசாரித்தனர். அப்போது அந்த குழந்தை அம்மாவிடம் இருக்கவே விருப்பம் என்றது.

BIGGBOSS வீட்டுக்குள் POLICE. நடந்தது என்ன ? - வனிதாவின் வழக்கறிஞர் விளக்கம் வீடியோ