’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’வில் களமிறங்கும் 3 ஹீரோயின்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2018 ஆண்டு காமெடி கலந்த பேய் படமாக வெளியான திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி சாண்டில்யா, ஷாரா உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர்.

Three heroines in Santhosh Peter Jayakumar's Iruttu Araiyil Murattu Kuthu 2

இப்படத்தை படத்தை 'ஹர ஹர மஹா தேவகி', 'கஜினிகாந்த்' படத்தை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயகுமார் இயக்கி இருந்தார். இதனையடுத்து இதன் இரண்டாம் பாகம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.

இந்த படத்தில் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயகுமாரே ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக இந்த படத்தில் 3 புதுமுக நடிகைகள் நடிக்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கரிஷ்மா, ஆக்ருதி, மீனல் ஆகிய இவர்கள் மூவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.