மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணி ''ஓ மை கடவுளே'' நடிகர்.. கிரைம் ஆக்‌ஷன் அதிரடி இயக்குநர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில நடிகர்களை ரசிகர்களுக்கு பார்த்தவுடன் பிடித்துவிடும், சிலரைப் பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும். இதில் முதல் வகையைச் சேர்ந்தவர் அசோக் செல்வன். பாய் நெக்ஸ்ட் டோர் போன்ற தோற்றமும், அலட்டல் இல்லாத நடிப்பும் அவரது ப்ளஸ்.  ஆரம்பத்தில் சின்ன ரோல்களில் நடித்தவருக்கு வில்லா visa கொடுக்க, தெகிடி smooth take off ஐ உருவாக்கித் தந்தது.

Thedgidi Director teaming up with Oh My Kaduvulae Actor

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவான தெகிடி 2014-ஆம் ஆண்டின் குறிப்பிடத்தகுந்த வெற்றிப் படமானது.  இந்நிலையில் அசோக் செல்வன் மற்றும் தெகிடி பட இயக்குநர் ரமேஷ் இருவரும் புதிய படத்துக்காக மீண்டும் இணைய உள்ளனர்.

“கொரோனா பிரச்னை காரணமாக, அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ரமேஷும் அசோக்கும் ஒரு படத்தில் வேலை செய்ய, இந்த நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்துகிறார்கள். இந்தப் படம் மீண்டும் ஒரு த்ரில்லராக இருக்கும். இயக்குநர் இன்னும் ஸ்கிரிப்ட் வேலைகளில் உள்ளார், அது முடிந்தவுடன், விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும். ” என்கிறது அசோக் செல்வன் வட்டாரம்.

தெகிடி வெளியான சமயத்தில், படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. இயக்குநர் ரமேஷ் ஒரு பேட்டியில், இதன் தொடர்ச்சியை நிச்சயம் எடுப்பேன் என்று கூறியிருந்தார். எனவே, இந்தப் படம் தெகிடி 2-வா அல்லது,  புதிய படமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

Entertainment sub editor