www.garudabazaar.com

'அஜித் வராததுதான் பிரச்சனையா ?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு நாடு முழுவதும் உள்ள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SPB Charan Clarifies the rumour about Ajith | நடிகர் அஜித் குறித்த முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்

அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவர் மறைவு குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. அதற்கு பதிலளிக்கும் விதமாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்களுடன் எஸ்பிபி சரண் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.

அப்போது பேசிய அவர், ''எனது அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் எங்களிடம் கலந்தாலோசித்து வந்தனர். எங்கப்பா காலமாகிட்டாரு. நாங்கள் அதில் இருந்து மீண்டுவர முயற்சிக்கும் போது நிறையே பேர் புரளிகளை சொல்லிட்டு இருக்காங்க. ரொம்ப வருத்தமான ஒரு நிலைமை.

அஜித் எனக்கு நண்பர். என்னோட அப்பாவுக்கு நல்ல நண்பர். அவர் வந்தா என்ன ? வரலனா என்ன ? அவர் வீட்டில் இருந்தே மரியாதை செலுத்தினால் என்ன இப்போ ? இது ஒரு பெரிய விஷயமாக ஆக்கவேண்டிய அவசியம் கிடையாது'' என்றார்.

'அஜித் வராததுதான் பிரச்சனையா ?' - சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

SPB Charan Clarifies the rumour about Ajith | நடிகர் அஜித் குறித்த முற்றுப்புள்ளி வைத்த எஸ்பிபி சரண்

People looking for online information on Ajith Kumar, SP Balasubrahmanyam, Sp charan, SPB will find this news story useful.