Godavari News Banner USA
Game Over Others Banner USA
Fakir Other Banner USA

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எப்படி இருக்கு ? - சிவகார்த்திகேயன் கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘கனா’ திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தனது கருத்தினை பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

Sivakarthikeyan's First Reaction on FDFS of Nenjamundu Nermaiyundu Odu Raja

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் பேனரின் கீழ் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் நாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிரின் காஞ்வாலா, ராதாரவி, ஆர்.ஜே விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷபிர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் முதல் காட்சியை காண வந்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் Behindwoods-யிடம் பேசுகையில், படம் பார்க்கவில்லை ப்ரோ, பார்த்துட்டு சொல்றேன் என தன் பாணியில் கிண்டலாக பேசினார். இதையடுத்து படத்தின் நாயகன் ரியோ ராஜ், விக்னேஷ்காந்த், ஷா உள்ளிட்டோர் பதற்றமாக இருப்பதகாவும், படம் மக்களை மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ எப்படி இருக்கு ? - சிவகார்த்திகேயன் கலாய் வீடியோ