Godavari News Banner USA

சிவகார்த்திகேயன் குறித்து பிரபல ஹீரோ - ''5 வருஷத்துக்கு முன் இந்த ஹீரோ இன்டர்வியூ பண்ணேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் தயாரித்த 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் ரியோ. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சிவகார்த்திகேயன் குறித்து ரியோ ராஜ் பெருமிதம் தெரிவித்தார் | Rio Raj tweets about Hero Sivakarthikeyan

இதனையடுத்து ரியோ, 'பானா காத்தாடி', 'செம போத ஆகாதே' படங்களின் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கும் 'பிளான் பண்ணி பண்ணனும்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ரம்யா நம்பீசன், பால சரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை, சித்தார்த் விபின், எம்.எஸ் பாஸ்கர், ராம்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை பாஸிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்த மீம் ஒன்றை பகிர்ந்த ரியோ, ''5 வருஷத்துக்கு முன்னாடி ஆங்கராக ஹீரோவை இன்டர்வியூ பண்ணேன். 5 வருஷத்துக்கு பிறகு அந்த ஹீரோவால் இங்க இருக்கேன்'' என சிவகார்த்திகேயன் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Entertainment sub editor