www.garudabazaar.com

LATEST: போதைப்பொருள் வழக்கில் நடிகை ரகுல் பிரித் சிங் நேரில் ஆஜர்! முழு விவரம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரகுல் ப்ரித் சிங் தமிழில் கார்த்தியுடன் தேவ், தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களிலும், சூர்யாவுடன் NGK படத்திலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் அறியப்படுபவர். இவர் தற்போது சிவகார்த்திக்கேயனுடன் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

rakul preet singh has arrived at the Enforcement Directorate

2017 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் தடைச்செய்யப்பட்ட போதை பொருள்களை வினியோகம் செய்ததில் கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெற்றதாக சந்தேகத்தின் பெயரில் தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு போலிசார் விசாரணையை தொடங்கினர்.

rakul preet singh has arrived at the Enforcement Directorate

இந்த 2017 போதைப்பொருள் வழக்கில், 62 பேர் விசாரணை செய்யப்பட் டனர். மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சாட்சிகளான நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர்கள் ராணா, ரவிதேஜா, இயக்குநர் புரி ஜெகநாத் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை  சம்மன் அனுப்பியது. இதனை முன்னிட்டு நடிகை ரகுல் பிரித் சிங் நேரில் அமலாக்கதுறையின் விசாரனைக்கு ஆஜரானார்.

rakul preet singh has arrived at the Enforcement Directorate

மேலும் நடிகர்கள் ராணா, ரவிதேஜாஆகியோரும் விரைவில் ஆஜராக உள்ளனர்,

rakul preet singh has arrived at the Enforcement Directorate

People looking for online information on Rakul Preet Singh will find this news story useful.