ரஜினிகாந்த் அதிரடி - ''அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்... எப்போதும் தயாராக இருக்கிறேன்''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. டி.இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ரஜினிகாந்த் தமிழ்நாடு ஐமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்தது குறித்து ட்வீட் | Rajinikanth tweets ab

சிஏஏக்கு எதிரான போராட்டம் தலைநகர் டெல்லியில் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் இதுகுறித்து பேட்டியளித்த ரஜினிகாந்த், உளவுதுறையின் தோல்வியே இந்த வன்முறைக்கு காரணம் என்றும், வன்முறையை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் பேட்டியளித்திருந்தார். இதற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவளித்து ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் அவரது வீட்டில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''இன்று தமிழ்நாடு ஐமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகள் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எப்போதும் அன்பும் ஒற்றுமையும், அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன்'' என்றார்.

Entertainment sub editor