அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த நடிகை.. மர்மமான முறையில் மரணம்... கொலையா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கூர்நா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதனை பரவலை தடுக்க பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  இதனையடுத்து பல பிரபலங்களும் வீட்டில்  அடைந்து இருக்கின்றனர்.

பிரபல சின்னத்திரை நடிகை மர்மமான முறையில் மரணம் Popular Tv artist shanthi is found dead in her apartments in a suspicious way

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான சாந்தி தனது அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று வியாழக்கிழமை இறந்து கிடந்தார். ஹைதராபத்தில் எல்லா ரெட்டிகுடாவில் இன்ஜினியர் காலனி அடுக்கு மாடி குடியிருப்பில் அவர் தனியாக வசித்து வந்தாராம்.

இந்நிலையில் அவரது குடியிருப்பில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ சத்தம் கேட்கிறது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், போலிசாருக்கு புகார் அளித்துள்ளனர். போலீஸ் வந்து பார்த்த போது சாந்தி சடலமாக கிடந்துள்ளார். இந்த கொலைக்கான காரணம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில்  இந்த செய்தி தெலுங்கு  சினிமாவில் மிகுந்த பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Entertainment sub editor