கொரோனா : கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்த கார்த்தி பட நடிகை.. எதற்காக தெரியுமா...?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சசிகுமார் நடித்த 'வெற்றிவேல்' என்னும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மலையாள நடிகை நிகிலா விமல். அதன் பின்பு மீண்டும் சசிகுமாருடன் 'கிடாரி' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகர் உடன் தம்பி படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார். உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வரும் நிலையில் கேரளாவில் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது

கொரோனவால் கால்சென்டரில் வேலைக்கு சேர்ந்த கார்த்தி பட நடிகை Popular karthi heroine nikila vimal joins call centre for corona relief

அதிலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சீராக கிடைக்கும் வண்ணம் கால் சென்டர்கள் மூலம் ஒழுங்கு செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசின் மூலம் இந்த கால்சென்டர்களில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டது.  இதனைப் பார்த்த நடிகை நிகிலா விமல் உடனே அந்த பணியில் இணைந்து கொண்டார். அதனையடுத்து மக்களிடம் தொலைபேசியில் பேசி, அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்று வேலையை அவர் பார்த்து வருகிறார். இந்த செய்தி மலையாள ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. இதனை அறிந்த மக்கள் நிகிலாவின் பரந்த மனப்பான்மை நினைத்து ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர்.

Entertainment sub editor