Lockdown :வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கி தவித்த நடிகர்... சற்றுமுன் வெளிவந்த நல்ல செய்தி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவிட்டுள்ளார். மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர்.

வெளிநாட்டு பாலைவனத்தில் சிக்கி தவித்த நடிகர் Popular actor struck in jordan during corona lockdown announces an happy news

மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் நடிகராக இருப்பவர் பிருத்திவி ராஜ். இவர் தனது அடுத்த படமான 'ஆடுஜீவிதம்' படப்பிடிப்பில் இருந்தார். இந்த ஷூட்டிங் ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் நடைபெற்று வந்தது. கொரோனா காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், 58 பேர் கொண்ட படக்குழு தாய்நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தது. இது பற்றி நடிகர் பிருத்திவி ராஜ் ஒரு நீண்ட பதிவு இட்டிருந்தார். மேலும் உணவுக்கும் பஞ்சமாக இருப்பதாகவும் கவலை தெரிவித்திருந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உலுக்கியது. எனவே அவர்கள் உதவி கேட்டு இந்திய அரசை தொடர்பு கொண்டனர்.

இந்நிலையில் அவரது மனைவி சுப்ரியா மேனன் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த பீதியில் இருந்தனர். அடிக்கடி வேதனை பதிவுகள் மூலம் இதை வெளிப்படுத்தனர். ஜோர்டான் பாலைவனத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் தற்போது முடிவடைத்துள்ளது. எனவே நடிகர் பிருத்திவி ராஜ் சீக்கிரம் வீடு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த செய்தி அவரது ரசிகர்களை நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Aadujeevitham Schedule Pack up! 😊❤️

A post shared by Prithviraj Sukumaran (@therealprithvi) on

Entertainment sub editor