'ஆசிட் ஊத்திடுவேனு மிரட்டுனாங்க' - மாடல் அழகி போலீஸில் புகார்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிஸ் சவுத் குயீன், மிஸ் தமிழ்நாடு 2016, மிஸ் சவுத் இந்தியா உள்ளிட்ட அழகி போட்டிகளில் பட்டம் வென்ற மாடல் அழகி மீரா மிதுன். இவர் கடந்த 2017ம் ஆண்டு தமிழில் இயக்குநர் சாய் கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படத்திலும், 2018ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Meera Mitun recieved a death threatfor organising Miss Tamil Nadu DIVA

‘மிஸ் தமிழ்நாடு டீவா 2019’ என்ற நிகழ்ச்சியை நடத்த மீரா மிதுன் தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார். இந்நிகழ்ச்சி வரும் ஜூன்.3ம் தேதி நடைபெறவிருந்த நிலையில், அழகிப் போட்டியை தடுத்து நிறுத்த அஜீத் ரவி, ஜோ மைக்கேல் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாக மீரா மிதுன் காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து Behindwoods-இடம் பேசிய மீரா மிதுன், ‘ஏற்கனவே நான் மிஸ் தமிழ்நாடு மண்டல இயக்குனராகவும் பணியாற்றியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சியை அஜீத் ரவி என்பவர் நடத்தினார். ஆனால் சில வேறுபாடு காரணமாக கடந்த 2017-ல் நான் அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டேன். அதன் பிறகு ‘மிஸ் தமிழ்நாடு டீவா 2019’ என்ற நிகழ்ச்சியை எடுத்து நடத்த நான் பதிவு செய்திருந்தேன். இது தமிழ் பெண்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடத்த திட்டமிட்டிருந்தேன்’.

‘இதைத் தொடர்ந்து ஏற்கனவே குற்றப்பிண்ணனி கொண்ட அஜீத் ரவி மற்றும் அவரது கூட்டாளியான ஜோ மைக்கேல் ஆகியோர், இந்த அழகிப்போட்டியை எடுத்து நடத்தினால் என் மீது ஆசிட் வீசிவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தனர்’ என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார். மேலும், இவர்கள் மீது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜூன் 3ம் தேதி நடைபெறவுள்ள அழகி போட்டிக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.