கொரோனா வைரஸ் எதிரொலி - பழைய ட்ரென்டுக்கு மாறும் குஷ்பூ.! இனிமே இதுதான் விளையாட்டாம்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ கரோனா வைரஸ் குறித்து பதிவிட்ட கருத்து நெட்டிசன்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் குறித்து குஷ்பூ பதிவு | khushboo's statement on corona virus outbreak in india and self quarantine

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர் குஷ்பூ. சினிமா மட்டுமின்றி சின்னத்திரை சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் இவர் ஆர்வம் காட்டி வந்தார். இவர் தற்போது ரஜினியை வைத்து சிறுத்தை சிவா நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா நடிக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால், மக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்ட குஷ்பூ, 'இந்த எதிர்ப்பாராத பிரேக்கை முடிந்தவரை பயன்படுத்தி கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் வரை எனக்கு படங்கள்.. மேலும் படங்கள், அப்புறம் தாயம், பல்லாங்குழி, லூடோ என குடும்பத்துடன் விளையாட்டு'' என அவர் பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor