கைதிக்கும் மாஃபியாக்கும் இப்போ இதுதான் பிரச்சனை..! இதுல கூட இன்னொரு ஆளும் இருக்காரு.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் ட்வீட்டுக்கு நடிகர் பிரசன்னா சூப்பர் ரிப்ளை கொடுத்துள்ளார். 

கைதிக்கும் மாஃபியாக்கும் இதுதான் பிரச்சனை | kaithi producer s.r.prabhu and mafia actor prasanna finds this diffucult

கடந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் கைதி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு இப்படத்தை தயாரித்தார். தீபாவளிக்கு வெளியான இப்படம், ரசிகர்களைக் கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து கைதி படத்தை, அஜய் தேவ்கன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ட்விட்டர் பக்கத்தில், 'படம் பார்ப்பதை விட, அதை தேர்ந்தெடுப்பது தான் கஷ்டமாக உள்ளது' என்ற ட்வீட்டுக்கு, ''சமயங்களில் நான் ஒரு மணி நேரம் படத்தை தேர்ந்தெடுக்க முயற்சித்துவிட்டு, எதுவும் பார்க்காமலேயே போயிருக்கிறேன்'' என பதிவிட்டார். இதற்கு நடிகர் பிரசன்னா, அவருக்கும் இந்த அனுபவம் இருப்பதாக ரிப்ளை கொடுத்தார். பிரசன்னாவின் ரிப்ளையை கண்ட நடிகர் சிபிராஜ், ''நான் மட்டும்தான் இப்படி இருக்கேன்னு நினைச்சேன்'' என ஜாலியாக பதிவிட்டிருக்கிறார். பிரபலங்களின் இந்த ஜாலி சாட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Entertainment sub editor